Tuesday, June 1, 2010

நாங்க...

நாங்க யாருன்னு கேக்கறிங்களா?
நாங்க மூணு பேர்...
கீதா லட்சுமி...அது நான்தான்...
நளினி...மிஸ் மிரர்
ஷீலா...மிஸ் ரெயின்போ
நாங்க முப்பெரும் தேவிகளும் வேல செய்யிறது ஒரே கம்பெனிலதா...
அதனால மூணுபேரும் இந்த பெங்களூருல ஒரு சின்ன வீட்ட வாடகைக்கு எடுத்து குடி இருக்கோம்.
இதுல மிஸ் ரெயின்போ B.E படிச்சு வந்ததால அவங்களுக்கு MS Class போற டென்ஷன் இல்ல. சோ வார இறுதி வந்தா போதும் பைய தூக்கிகிட்டு ஊருக்கு கெளம்பிருவாங்க.
நானும் மிஸ் மிரரும்தான் வீட்டில் அராஜக ஆட்சி.
நாங்க எது செஞ்சாலும் வீட்டு ஒனர்கு தெரிஞ்சிடும். ஏன்னா அவங்க 1st floor நாங்க ground floor  . அதுதா விசயமே:(
வீட்ல தண்ணி வராத ஒரு நாள் ஒரு tap தெரந்துயிருன்தது தெரியாம நாங்க மூணு பேரும் ஆபீஸ் போய்டோம்.
சாயந்திரம் வந்து பாத்தா வீடு தண்ணில மெதக்குது. மூணுபேரும் ஷாக் ஆகி நின்னிருந்தப்ப கரெக்டா வீட்டுக்காரங்க பாத்துட்டாங்க:(
திட்டுன்னாத்திட்டு அப்டி ஒரு திட்டுங்க.
கன்னடம் தெரியும்ங்கற ஒரே பாவத்துக்காக மொத்த திட்டும் எனக்குதா கெடச்சுது:(
அது முடிஞ்சுதா கொஞ்ச நாள்லயே ஹீட்டர் ரிப்பேர் ஆகி போய் மறுபடியும் நானேதா திட்டு வாங்கின.
இந்த மாதிரி பல பல சாகசங்கள நாங்க செஞ்சிருக்கோம்.
வீட்டுல நாங்க சமைக்கறது எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா??
நாங்க சமைச்சு முடிச்சு கெளம்பரதுக்குள்ள மணி பத்தாகிடும்.
மறுபடியும் ஆபீஸ் மறுபடியும் வீடு. சனிக்கிழமை ஆனா காலேஜ் போகணும்.
அப்பப்போ ஷாப்பிங். எப்பவாவது அஞ்சப்பர் ஹோட்டல்ல டின்னர்.
இப்டிதா எங்க லைப் போய்கிட்டு இருக்கு.

1 comment:

Asiya Omar said...

”நாங்க’ பகிர்வு வெரி இண்ட்ரெஸ்டிங்,ப்ளாக் போஸ்டிங் இப்ப காணோம்!