Tuesday, February 15, 2011

இதுதான் நான்..

இதுதான் நான்..


கண்கள் விழிக்கும்போது தெரியும் உன் முகம்,
எனது நாளை உன் வசம் வைத்திருக்கும்..
கணினி திரையில் தெரியும் உன் கண்கள்,
என் வேலை பதற்றத்தை குறைத்திடும்..
மிக அருகில் ஈரத்தோடு உன் இதழ்கள்,
மிகப்பிடித்த உறக்கத்தை களவாடும்..
சந்திக்கும் நேரம் முடியும்போது
பிரிவை எதிர்கொள்ள முடியாமல்
உன்மேல் நான் காட்டும் கோபம்,
அதன் காரணம் புரியாமல் நீ வாடும்போது,
என் மனம் உடைந்து போகும்..
பிடிக்காத செயலுக்காக போடும் சண்டைகளில்,
உனக்கு சரியாய் நான் பேசும் சொற்களில்
துவண்டுபோகும் உன் மனதை எதிர்கொள்ள
என்னவனே எனக்கு அவ்வளவு உறுதி இல்லை.
அதற்காகவே தோற்று போவேன் எப்போதும்..
...


Wednesday, August 25, 2010

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு



திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
IT ல இருக்கறவங்களுக்கு இது ஒரு பெரிய கனவு.
ஆ ஊ-னா அமெரிக்கா அப்பிரிக்கா ஆஸ்திரேலியான்னு பறக்கறாங்க சாரி போறாங்க.

இந்த onsite போவதில் பல கஷ்டங்கள் இருக்கின்றன.கொமரபாளையத்து பெண்ணுக்கு 300km தாண்டி பெங்களுருக்கு வேலைக்கு வரும்போது தோன்றிய அல்லது தோற்றுவிக்கப்பட்ட இடையூறுகள் இருந்ததோ அது போலவே onsite போகும்போதும் ஏற்படும். தங்கும் பிரச்சினை, உணவு பிரச்சினை, வேலை நேரங்கள், புதிய பழக்கங்கள், தட்ப வெப்ப நிலை, உடல் ஆரோக்கியம் என பல விஷயங்கள்.

ஆனாலும் படிப்ப முடிச்சு வேலைக்கு IT கம்பெனில சேரும் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும் ஆசை இதுதான். வேலைக்கு சேர்ந்த ரெண்டு வருஷத்தலையே onsite போய்டணும். எவ்வளவு சம்பாதிக்க முடியுமோ அவ்வளவு சம்பாதிச்சிரனும்.

இதுக்கு காரணம் வெளிநாட்டுக்கு போறேன்னு பீலா விடறதுக்கும்
ஊற சுத்தரதுக்கும் மட்டுமில்லை. பலருக்கு பலவிதமான நன்மைகள் இருக்கு.

சொந்தக்காரங்கள பொருத்தவரைக்கும்...
அக்காவுக்கு லேப்டாப் தம்பிக்கு ஒரு ஐ-போட், மத்தவங்களுக்கு டப்பா நெறைய சாக்லேட்னு வாங்கிட்டுவந்து குடுக்கறது.
இல்லையா விதவிதமா டிரஸ், கூலிங் கிளாஸ், எக்ஸ்சட்ரா, எக்ஸ்சட்ரா வாங்கிட்டுவரனும்.

Onsite  போறது பையனா இருந்தா...
ஒன்னு நல்லா ஊற சுத்திட்டு அவனுக்கு புடிச்சமாதிரி என்ஜாய் பண்ணிட்டு வர்றதுக்கு.
இன்னொன்னு அளவா என்ஜாய் பண்ணிட்டு கெடச்ச வருமானத்துல சொந்த பிசினஸ் இல்ல சொந்த வீடு/கார் வாங்கறது.

அதுவே ஒரு பொண்ணா இருந்தா...
சொந்த ஊர்ல கெடைக்காத ஒரு முழு மனதான சுதந்திரத்தை அனுபவிக்க.
அல்லது அப்பா அம்மாவுக்கு செலவு வெக்காம தன்னோட கல்யாண செலவுகளுக்காக.  

எனக்கும் ஒரு காரணம் உண்டு...
பள்ளிப்பருவத்தில் படித்த ஒருசில கம்ப்யூட்டர் படிப்புகளும் +1 +2 வில் படித்த கம்ப்யூட்டர் பாடங்களையும் வைத்துக்கொண்டு என்ன செய்வது?
என் உறவினர்கள் மத்தியில் என் வீட்டை நானும் உயர்த்திப பார்க்க ஆசைப்பட்டு BE படிக்கிறேன் என வீட்டில் கேட்டேன். தங்கையையும் படிக்க வெக்கணும். உனக்கே எவ்வளவு செலவு செய்யறதுன்னு பதில் வந்தது. BSc படித்தால் பெரிய கம்பனிகளுக்கு வேலைக்கு   போகமுடியதேனு அழுகைதான் வந்தது. விப்ரோ இன்போசிஸ் போன்ற நிறுவனகள் என் கனவாக இருக்க BSc  படித்தால் போதாதே என பயந்து கொண்டிருந்தேன். அப்போதெல்லாம் தெரியாதே இந்த கம்பெனில்லாம் BSc மாணவர்களையும் வேலைக்கு எடுப்பாங்கன்னு அதான். BE படிக்க ஆசைப்பட்டு பல வேலைவாய்ப்பு/வழிகாட்டுதல் கட்டுரைகள் படித்ததால் கொஞ்சம் அறிவு வந்து  ஒரு நல்ல கல்லூரியில் BSc சேர்ந்தேன்.

பள்ளி கல்வியை முற்றிலும் தமிழில் முடித்த எனக்கு BSc க்கு இன்ஜினியரிங் கல்லூரியில் படித்தது ஆரம்பத்தில் சற்றே பிரம்மிப்பையும் பயத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் நண்பர்கள், நட்பான ஆசிரியர்கள் என பலவித அனுபவங்கள்.
தமிழ் மீடியமில் படித்த உனக்கு கண்டிப்பாக campus interviewவிலெல்லாம் வேலை கிடைக்காது, அதனால் அவ்வளவு பெரிய கல்லுரியிலேல்லாம் சேர்ந்து ஏன் அப்பா அம்மாக்கு செலவு வைக்கிறன்னு கேட்ட என் சொந்தக்காரர்களுக்கு சரியான பதிலடி கிடைத்தது. மூன்றாம் ஆண்டு தொடக்கத்திலேயே இந்தியாவின் முன்னணி IT நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அன்றைய தினம் என் அம்மா அப்பாவின் கண்களில் மிளிர்ந்த சந்தோஷமும் பெருமையும் இன்றும் என்னால் மறக்கமுடியாது.

வேலைக்கு வந்து சேரும்போதும் பல பிரச்சனைகள். அவை அனைத்தையும் கடந்து வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒவ்வொரு வருடமும் சம்பள உயர்வைபற்றி அம்மாவிடம் சொல்லும்போது மகிழ்ந்து போகிறார். காரணம் ஏறிக்கொண்டே இருக்கும் விலைவாசியும், BE படித்துக்கொண்டிருக்கும் என் தங்கையும், கை இருப்பில் உள்ள 6 பவுன் தங்கமுமே.

உள்ளூரில் வேலை செய்தால் கிடைக்கும் பணத்தைவிட வெளியூருக்கு வந்தால் நெறைய சம்பாதிக்கலாம் என அறியப்பட்டேன்.
இங்குவந்த பிறகு வெளிநாட்டிற்கு சென்றால் மிக அதிகமாக சம்பாதிக்கலாமென. நான் என்ன செய்வது? ஒரு சாதாரணப் பெண்ணாக நானும் விரும்புகிறேன் onsite செல்ல.





Thursday, July 22, 2010

பள்ளிக்கூடம்

ஒன்னாம் பெல் அடித்தால் அதிகரிக்கும் ஆரவாரம்,
ரெண்டாம் பெல் அடித்தால் அடங்கிப்போகும்.
நீராரும் கடலுத்த முடிந்தவுடன் நிரம்பிப்போகும் வகுப்பறையில்,
ஓரெண்டு ரெண்டு ரெண்ட்ரெண்டு நாலு என கூவும் பிள்ளைகள்,
மதிய சாப்பாட்டிற்கு மணி அடித்ததும்,
சத்துணவிற்கு வரிசையில் இடம் பிடிக்க பறக்கும்,
நீரென சாம்பாரும், தோலுரிக்காத அவித்த முட்டையையும்
வயிறார உண்டு களித்ததும்,
தட்டைக் கழுவி பைக்குள் போட்டுவிட்டு,
கண்ணாமூச்சி, நொண்டி என விளையாடும்,
ஜோடி புறாவும் அளவிலா குதூகலம் தரும்.
மீண்டும் ஒன்னாம் பெல் அடித்தால் அதிகரிக்கும் ஆரவாரம்,
ரெண்டாம் பெல் அடித்தால் அடங்கிபோகும்.
மீண்டும் ஆரம்பிக்கும் ஓரெண்டு ரெண்டு.
போட்டோக்காரர் வந்துவிட்டார் என்றதும்
மகிழ்ந்து போகும் முகங்கள் ஒன்றை ஒன்று
பார்த்துக்கொண்டு சிரித்துக்கொள்ளும்.
கிழிந்த சட்டையை ஊக்குப்பின் குத்தி சரி செய்யும்.
என் பக்கத்தில் நீ, உன் பக்கத்தில் நானென நினைக்கும்.
உயரப்படி நிற்க வைக்கப்படும்போது வாடிப்போகும்.
சிலர் சிரித்துக்கொண்டு, சிலர் தூங்கிக்கொண்டு,
சிலர் உம்மென்று,சிலர் யாரையோ பார்த்துக்கொண்டு...
இப்போது நானும் இந்த புகைப்படத்தில்
என்னை மறந்துகொண்டு...

Friday, July 9, 2010

நல்லான்


நன்று செய்தல் எல்லோருக்கும் நன்று.
தீது செய்தல் தனக்கு மட்டும் நன்று.
விடிந்து பார்த்தால் வெளிச்சமில்லை,
வாசலில் அல்ல..
தீது செய்தவன் மனதில்.
பார்த்தவன் தீயவன் இல்லை,
தீமை செய்யப்பட்ட நல்லவன்,
இன்றாவது விடிந்ததா என்று.

Tuesday, June 29, 2010

வானவில்லே வானவில்லே!!!

சென்ற வார இறுதியில் பெங்கலூர்வில் இருந்து என் ஊருக்கு செல்லும் போது SETC ல் சென்றேன். பஸ் நிரம்பிவிட்டதால் என்னையும் இன்னும் இருவரையும் டிரைவர் சீட்டுக்கு பின்னாடி உக்கார வெச்சிட்டாரு கண்டக்டர். கிருஷ்ணகிரிலிருந்து தர்மபுரி செல்லும் போது வழியில் நானும் மற்ற இரு பயணிகளும், கண்டக்டர் மற்றும் டிரைவரும் மட்டுமே ரசித்த இந்த வானவில்...(மற்ற பயணிகள் அனைவரும் வசதியாக உறங்கி விட்டதாலும் இதை அவர்கள் பார்க்ககூட இல்லை)
பல வருடங்களுக்கு பிறகு நான் பார்த்த முழு வானவில் இது.






Monday, June 14, 2010

ஒரு விளையாட்டு ஒரு நட்பு...

இது நானும் என் தோழியும் ஆறாம் ஏழாம் வகுப்பு படிக்கும்போது கண்டுபிடித்த விளையாட்டு.
எங்கள் பள்ளியில் எல்லாருக்கும் பஸ் பாஸ் இருப்பதால் மாலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல பெரிய கூட்டம் பஸ் ஸ்டாப்பில் நிற்கும்.
எனக்கோ அப்போதெல்லாம் கூட்டத்தை பார்த்தாலே பயம். அதிலும் கல்லூரி அண்ணன்கள் தொங்கிக்கொட்டு ஒரு பக்கமாக சாய்ந்து கொண்டு வரும் பேருந்தை பார்த்தால் அதைவிட பயமா இருக்கும்.
மத்தவங்கஎல்லாம் எவ்வளவு கூட்டமாக இருந்தாலும் ஏறிக்கிட்டு போய்டுவாங்க.
நான் மட்டும் தனியா நின்னுட்டு அடுத்த பஸ்சுக்காக வெயிட் பண்ணுவ.
அப்டி ஒரு நாள் வெயிட் பண்ணும்போதுதா லில்லி-ஐ பார்த்தேன். அவளும் என்ன மாதிரியே பாவமா அடுத்த பஸ்க்காக வெயிட் பண்ணிட்டு இருந்தா. அப்போ நான் 6th A அவ 6 th B class.  நா அவளை பார்த்தப்ப அவளும் என்னை பார்த்து சிரிச்சா.
ரெண்டு பேரும் ஹாய் சொல்லி பேசிக்கிட்டோம். சாயந்திர நேரம்கரதால ரெண்டு பேருக்கும் பசி எடுத்துகிச்சு. பஸ்சும் வரவே இல்ல. சரின்னு எதிர்ல இருந்த டீ கடையில ரெண்டு பேரும் ஆளுக்கு ஒரு ஊட்டி வருக்கி வாங்கி சாப்டோம். ஒரு வருக்கி ஒரு ரூபாதா. இதுக்கப்பறம் நாங்க இதா ஒரு வழக்கமாவே வெச்சிக்கிட்டோம்.
இதோ சாப்டு முடிச்சவுடனே எங்க ஊரு டவுன் பஸ் வந்துடுச்சி. காலேஜ் கூட்டமும் எங்க ஸ்கூல் கூட்டமும் இல்லாததால பஸ் காலியா வந்திச்சி. ரெண்டு பேரும் ஏறிக்கிட்டு சீட்ல உக்கந்தப்போ ஒரு ஐடியா தோணிச்சு. அதுதாங்க நாங்க கண்டுபிடிச்ச விளையாட்டு. (அப்போ அது எங்களுக்கு விளையாட்டு மாதிரி தெரிஞ்சிச்சி.)
அது என்னன்னா போற வழியில தெரியிற எதாவது ஒரு வார்த்தைய ஒருத்தர் சொல்லணும். அதாவது பஸ்சுக்கு வெளில கடைல நேம் போர்டுலாம் இருக்குமில்ல அது இல்லைனா கொஞ்சம் பெருசா கண்ணுக்கு தெரியற அளவு இருக்கற வார்த்தைகள்.
ஒருத்தர் ஒரு வார்த்தைய சொன்னா அந்த பஸ் மூவ் ஆகறதுக்குள்ள அது எங்க இருக்குனு கண்டு பிடிச்சிரனும். இப்டி ஆள் மாத்தி ஆள் ஒருத்தர் சொல்லணும் ஒருத்தர் கண்டுபிடிக்கணும்.
இதுல என்னை சந்தோசம்னா எல்லாரும் முதல் பஸ்ல எடமில்லாம நெருக்கிக்கிட்டு பசியோட போய்இருப்பாங்க...ஆனா நாங்க ஜாலியா சாப்டுட்டு அடுத்த பஸ்ல ப்ரீயா உக்காந்துக்கிட்டு விளையாடிக்கிட்டு வரோமுங்கரதுதா.
இந்த விளையாட்டுல அறிமுகமான  எங்கள் நட்பு 12 வருட நட்பா இன்னும்  தொடர்ந்துட்டு இருக்கு.
இப்போ அவ ஒரு டீச்சர்...

Tuesday, June 1, 2010

நாங்க...

நாங்க யாருன்னு கேக்கறிங்களா?
நாங்க மூணு பேர்...
கீதா லட்சுமி...அது நான்தான்...
நளினி...மிஸ் மிரர்
ஷீலா...மிஸ் ரெயின்போ
நாங்க முப்பெரும் தேவிகளும் வேல செய்யிறது ஒரே கம்பெனிலதா...
அதனால மூணுபேரும் இந்த பெங்களூருல ஒரு சின்ன வீட்ட வாடகைக்கு எடுத்து குடி இருக்கோம்.
இதுல மிஸ் ரெயின்போ B.E படிச்சு வந்ததால அவங்களுக்கு MS Class போற டென்ஷன் இல்ல. சோ வார இறுதி வந்தா போதும் பைய தூக்கிகிட்டு ஊருக்கு கெளம்பிருவாங்க.
நானும் மிஸ் மிரரும்தான் வீட்டில் அராஜக ஆட்சி.
நாங்க எது செஞ்சாலும் வீட்டு ஒனர்கு தெரிஞ்சிடும். ஏன்னா அவங்க 1st floor நாங்க ground floor  . அதுதா விசயமே:(
வீட்ல தண்ணி வராத ஒரு நாள் ஒரு tap தெரந்துயிருன்தது தெரியாம நாங்க மூணு பேரும் ஆபீஸ் போய்டோம்.
சாயந்திரம் வந்து பாத்தா வீடு தண்ணில மெதக்குது. மூணுபேரும் ஷாக் ஆகி நின்னிருந்தப்ப கரெக்டா வீட்டுக்காரங்க பாத்துட்டாங்க:(
திட்டுன்னாத்திட்டு அப்டி ஒரு திட்டுங்க.
கன்னடம் தெரியும்ங்கற ஒரே பாவத்துக்காக மொத்த திட்டும் எனக்குதா கெடச்சுது:(
அது முடிஞ்சுதா கொஞ்ச நாள்லயே ஹீட்டர் ரிப்பேர் ஆகி போய் மறுபடியும் நானேதா திட்டு வாங்கின.
இந்த மாதிரி பல பல சாகசங்கள நாங்க செஞ்சிருக்கோம்.
வீட்டுல நாங்க சமைக்கறது எவ்வளவு பெரிய சாகசம் தெரியுமா??
நாங்க சமைச்சு முடிச்சு கெளம்பரதுக்குள்ள மணி பத்தாகிடும்.
மறுபடியும் ஆபீஸ் மறுபடியும் வீடு. சனிக்கிழமை ஆனா காலேஜ் போகணும்.
அப்பப்போ ஷாப்பிங். எப்பவாவது அஞ்சப்பர் ஹோட்டல்ல டின்னர்.
இப்டிதா எங்க லைப் போய்கிட்டு இருக்கு.