Tuesday, February 15, 2011

இதுதான் நான்..

இதுதான் நான்..


கண்கள் விழிக்கும்போது தெரியும் உன் முகம்,
எனது நாளை உன் வசம் வைத்திருக்கும்..
கணினி திரையில் தெரியும் உன் கண்கள்,
என் வேலை பதற்றத்தை குறைத்திடும்..
மிக அருகில் ஈரத்தோடு உன் இதழ்கள்,
மிகப்பிடித்த உறக்கத்தை களவாடும்..
சந்திக்கும் நேரம் முடியும்போது
பிரிவை எதிர்கொள்ள முடியாமல்
உன்மேல் நான் காட்டும் கோபம்,
அதன் காரணம் புரியாமல் நீ வாடும்போது,
என் மனம் உடைந்து போகும்..
பிடிக்காத செயலுக்காக போடும் சண்டைகளில்,
உனக்கு சரியாய் நான் பேசும் சொற்களில்
துவண்டுபோகும் உன் மனதை எதிர்கொள்ள
என்னவனே எனக்கு அவ்வளவு உறுதி இல்லை.
அதற்காகவே தோற்று போவேன் எப்போதும்..
...